யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் இணையாக வளர்ந்து வந்தவர் தான் நடிகர் சுரேஷ்கோபி. குறிப்பாக ஆக்ஷன் படங்களாக நடித்து ஆக்ஷன் ரசிகர்களின் மிகப்பெரிய வட்டத்தை பெற்றிருந்தார். சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இறங்கி தேசிய கட்சியான பாஜகவில் சேர்ந்தார். சில ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பு வகித்தார்.
2024ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் எம்பி ஆக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பெட்ரோலியம் எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே துறை சார்ந்த பணிகளை கவனித்து வந்த அவர் தான் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்துக் கொடுப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.
சமீபத்தில் தான் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் கடந்த 2020லேயே அவர் நடிப்பதாக துவங்கப்பட்டு கொரோனா தாக்கம், கதை பிரச்னை, சுரேஷ் கோபியின் அரசியல் பயணம் என பல காரணங்களால் நின்று போயிருந்த ஒத்தக்கொம்பன் திரைப்படம் தற்போது படப்பிடிப்பை துவங்கியுள்ளது. மத்திய அமைச்சரான பிறகு நீண்ட நாட்கள் கழித்து சுரேஷ்கோபி. இந்த படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக நேற்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.