பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் நடிகை லட்சுமி மஞ்சு. பிரபல சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகள் தான் இவர். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக ரசிகர்களுடன் கலந்து உரையாடுபவர். தன்னைப் பற்றிய பதிவுகளை அடிக்கடி வெளியிடுபவர். ஆனால் சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் லட்சுமி மஞ்சு.
“ஆனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை என்னாலும் கூட கையாள முடிகிறது. அதே சமயம் சில மர்ம நபர்கள் அவர்களின் தேவைக்கேற்றபடி என் கணக்கை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதை என்னால் தடுக்க முடியவில்லை. அதனால் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் பதிவுகளை பெரிய முக்கியத்துவம் கொடுத்து யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அதில் பெரும்பாலும் நான் பணம் கேட்பதாக தான் அதிகம் செய்திகள் வருகின்றன. அப்படி யாரிடமாவது எனக்கு பணம் தேவை என்றால் நான் நேரடியாகவே கேட்டு வாங்கிக் கொள்கிறேன். இப்படி சோசியல் மீடியாவில் கேட்க மாட்டேன்” என்று தனது ட்விட்டர் கணக்கு மூலமாக இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார் லட்சுமி மஞ்சு.
அது மட்டுமல்ல தனது போன் நம்பரை கூட அவர்கள் ஹேக் செய்துள்ளார்கள் என்று கூறியுள்ள லட்சுமி மஞ்சு, சமீபத்தில் ஒரு நைஜீரியன் நாட்டு நம்பரில் இருந்து தனக்கு ஒரு மெசேஜ் வந்ததாகவும் அதில் என்னுடைய மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதனால் எனது மொபைல் போனிலிருந்து ஏதாவது வித்தியாசமான மெசேஜ்கள் வந்தால் கூட அதையும் புரிந்து கொண்டு தவிர்க்கவும் என்று விரக்தியுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.