Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

19 ஏப், 2025 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Producer-accuses-Manjummel-Boys-actor-of-calling-him-in-the-middle-of-the-night-and-asking-for-ganja

கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகத்தை போதை பொருள் குற்றச்சாட்டு ஆக்கிரமித்துள்ளது. கோழிக்கோட்டில் கஞ்சாவுடன் பிடிபட்ட இருவரில் பெண் ஒருவர் மலையாள நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதைப்பொருள் சப்ளை செய்வதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஷைன் டான் சாக்கோ படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் நடிகர் சங்கத்தில் அளித்த புகாரை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் போலீசார் அவரை விசாரணைக்காக தேடி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது அவரை வைத்து 'நமக்கு கோடதியில் காணாம்' என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஹசீப் மலபார் என்பவர் படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “என்னுடைய படப்பிடிப்பு கோழிக்கோட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் நான் தொடுபுழாவில் இருந்தேன். நள்ளிரவு 3 மணி அளவில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி தனக்கு புகைப்பதற்கு கஞ்சா வேண்டும் என்று கேட்பதாக எனக்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து தகவல் வந்தது. அது கிடைத்தால் தான் மறுநாள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தன்னால் நல்ல மூடுடன் நடிக்க முடியும் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதாகவும் இல்லை என்றால் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் ஏற்படும் என்றும் தயாரிப்பு நிர்வாகி மூலம் எனக்கு சொல்லப்பட்டது.

எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. அதேசமயம் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே அந்த பொருள் கிடைத்ததால் அங்கேயே பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன். படப்பிடிப்பிற்காக கொண்டு வரப்பட்ட கேரவனை ஸ்ரீநாத் பாஷி இப்படி போதைப்பொருளை புகைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினார். வேறு யாரையும் அந்த கேரவனுக்குள் நுழைய விடவில்லை. அந்த சமயத்தில் இது குறித்த தகவலை நான் வெளியிட்டு இருந்தால் போலீசார் அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட படத்தில் பல கோடிகளை முதலீடு செய்திருந்தால் அதை வீணடிக்க நான் விரும்பவில்லை.

அதனால் வேறு வழியின்றி அவரது செயலை கண்டும் காணாதது போல் போக வேண்டி இருந்தது. இப்போதும் பல தயாரிப்பாளர்கள் இதேபோலத்தான் சில நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தி விட்டு அவர் பின்னால் கால்ஷீட் கேட்டு அலைந்து கொண்டிருப்பதையும் நான் பார்க்கிறேன். இவர்களைப் போன்ற சிலரால் தான் மலையாள சினிமாவிற்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஹசீப் மலபார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்திஇன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் ... கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in