பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பைசன் படத்தை அடுத்து தனது புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கியுள்ளார் மாரி செல்வராஜ். அதில் அவர் பேசும்போது, பைசன் படத்திற்கு பிறகு அடுத்து இயக்கும் படத்திற்கான கதை வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். அதோடு ரசிகர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. முதல் படத்தை இயக்கும்போதே நான் எங்கிருந்து வருறேன் என்பதை கூறிவிட்டுதான் படத்தை தொடங்கினேன். என்னை பொருத்தவரை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இப்போதைக்கு நான் அரசியலில் இல்லை. என்றாலும் எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் தொடங்கினால் சாதிக்கு எதிராகத்தான் தொடங்குவேன் என்றும் அந்த மேடையில் பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ் .