சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் உபேந்திரா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக காளீசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். இவரது மனைவி பிரியங்கா திரிவேதி. இவரும் நடிகை தான். தமிழில் அஜித்துடன் 'ராஜா' படத்தில் ஜோடியாக நடித்தவர். இந்த நிலையில் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன.
இந்த போன்களில் இருந்து அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள சிலருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று பணம் கேட்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஒரு சில நண்பர்கள் மூலமாக உபேந்திரா மற்றும் பிரியங்கா இருவருக்குமே தெரிய வந்தது. உடனடியாக இருவருமே தங்களது சோசியல் மீடியாவில் தனித்தனி வீடியோக்களை வெளியிட்டு ''எங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதனால் அதிலிருந்து பணம் கேட்டு வரும் மெசேஜ் நாங்கள் அனுப்பியது இல்லை. தயவு செய்து அதை புறக்கணியுங்கள். எங்கள் போன்கள் மீட்கப்பட்டதும் நாங்களே தகவல் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.