தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
90களுக்கு பின்னால் வந்த இசையமைப்பாளர்களுக்கு எப்படி இளையராஜா ஒரு மானசீக குருவாக இருந்தாரோ அதேபோல இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல மலையாள இசையமைப்பாளர் சுசின் ஷியாம், தனது பேட்டிகளில் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மானை தனது மானசீக குருவாக புகழ்ந்து பேசி வருபவர். கடந்த வருடம் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பின் தொடர ஆரம்பித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகராக மாறி உற்சாகத்தில் துள்ளி குதித்த சுசின் ஷியாம், “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இதுதான் முதன்முதலாக என்னுடைய ரசிக தருணம். உங்களுடைய அன்பான மெசேஜால் உண்மையிலேயே பெருமை அடைந்தேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சுசின் ஷியாம்..