ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மீது மான்வேட்டை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து பிஷ்னோய் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் கருப்பு நிற மான்களை சல்மான்கான் வேட்டையாடியதால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அதே போன்று மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக மும்பை போலீசில் தெரிவித்திருக்கும் சல்மான்கான், தனது குடும்பத்தாரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.