எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் |
கே.பாக்யராஜ் இயக்கிய 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த சுலக்ஷனாவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பலரும் அதுதான் அவரது அறிமுக படம் என்று நினைப்பார்கள். ஆனால் அவர் அதற்கு முன்பு 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
சுலக்ஷனா ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர். அவரது தாத்தா சென்னையில் சினிமா பத்திரிகையாளராக இருந்தார். தாத்தா வீட்டில் வளர்ந்த சுலக்ஷனா, தாத்தாவுடன் அடிக்கடி படப்பிடிப்பு செல்வார். அப்படி ஒரு நாள் கே.பாலச்சந்தரின் 'காவியத் தலைவி' படப்பிடிப்புக்கு தாத்தாவுடன் சென்றார். ஜெமினி கணேசன், சவுகார் ஜானகிக்கு மகளாக நடித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு சரியாக நடிக்க வரவில்லை. இதனால் படப்பிடிப்புக்கு வந்திருந்த சுலக்ஷனாவை கூப்பிட்டு நடிக்க வைத்தார். அப்போது அவருக்கு வயது 3. அதன் பிறகு 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கில் மட்டும் 80 படங்கள்.
'சுபோதயம்' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். சுலக்ஷனாவின் இயற்பெயர் ஸ்ரீதேவி. அப்போது ஸ்ரீதேவி முன்னணியில் இருந்தால் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கே.விஸ்வநாத், சுலக்ஷனா என்று பெயரை மாற்றினார். அதன்பிறகு கன்னடத்தில் ராஜ்குமார் ஜோடியாக நடித்து அங்கேயும் பிரபலமானர். அதன்பிறகுதான் கே.பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.