ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் பணிகள் காரணமாக அவருக்கு நீர்சத்து குறைவு என்ற பாதிப்பு என்றும், வழக்கமான பரிசோதனை என்றும் கூறப்பட்டது.
தற்போது இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் (ரம்ஜான்) நோன்பு இருந்ததாலும், சைவமாக மாறியதாலும் எனக்கு இரைப்பையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். நான் வாழ வேண்டும் என்று இவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்பதை அறிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் வருகிற மே 3ம் தேதி ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள 18 நகரங்களில் 'வொண்டர்மென்ட்' என்கிற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதற்கான ஒத்திகையில் பிசியாக இருக்கிறார் ரஹ்மான்.