காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும், ஏஆர் ரஹ்மானும் சாதனையாளர்களாக பார்க்கப்படுபவர்கள். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா, ஆஸ்கர் விருது வாங்கியவர் ரஹ்மான்.
இளையராஜாவிடம் பணி புரிந்தவர் தான் ரகுமான் என்பதும் பலருக்கும் தெரியும். கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. அவர் கொடுத்த பேட்டியை பலரும் பதிவிட்டார்கள்.
அவரது பேட்டியில் பேசியதில் முக்கியமான விஷயமாக, “ஒரு பாடல் புதிதாக பூத்த மலர் போன்று இருக்க வேண்டும்,” என்பது பலராலும் ரசிக்கப்பட்டது. ஒரு பாடலும், இசையும் எப்படி இருக்க வேண்டும் என்றும் இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார்.
அதனால் ஈர்க்கப்பட்டுத் தான் ஏஆர் ரஹ்மான், இளையராஜாவின் பேட்டியை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இளையராஜா பேட்டியை ரஹ்மான் டுவீட் செய்தது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்து. பலரும் அதைப் பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்களில் இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷும் ஒருவர். ரஹ்மானின் டுவீட்டை ரிடுவீட் செய்த தனுஷ், அதில், “இந்த டுவீட்டும், டுவீட்டுக்குள் இருக்கும் விஷயமும்...'” எனக் குறிப்பிட்டு கை கூப்பும் எமோஜியையும், ஹாட்டின் எமோஜியையும் போட்டுள்ளார். இளையராஜா, ரஹ்மான் இருவரையும் மதிக்கும் தனுஷின் பதிவுக்கும் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.