காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் லாக்டவுன் காரணமாக பிரபாஸ் ஏற்கனவே நடித்து வந்த படங்கள் தாமதமாகி வந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச் சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஆந்திராவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதால் நாக் அஸ்வினும் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பிரபாஸ் கலந்து கொள்ளாத நிலையில் அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் நாக் அஸ்வின். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் - அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.