‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள '99 சாங்ஸ் வருகிற ஏப்ரல் 16 அன்று வெளியாகிறது. இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரவலான பாராட்டை பெற்றுள்ளது. இசையால் வாழ்க்கையை இழந்த ஒரு குடும்பத்தை அந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இளைஞன் எப்படி தூக்கி நிறுத்துகிறான் என்பதுதான் கதை. 100 பாடல்களை உருவாக்க வேண்டும் என்று போராடுகிற அவர் 99வது பாடல் உருவாக்கத்தின் போது எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் திரைக்கதை.
இதன் கதையை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியுள்ளார். டீசரை பார்த்த நெட்டிசன்கள் இது ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த கதை என்ற கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். 'தி தேவாரிஸ்ட்ஸ்' மற்றும் 'பிரிங் ஆன் தி நைட்' ஆல்பங்களை இயக்கிய விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏஹன் பட், எடில்ஸி வர்காஸ் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது: பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்'ன் மையக் கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. என்றார்.