2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், பின்னர் கணவருடன் சர்ச்சை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்து மறு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான அவர், தற்போது அமெரிக்காவில் நடனப் பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 11,600 பரதநாட்டிய கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு நிமிட பாடல் ஒன்றுக்கு அழகாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் திவ்யா உன்னி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டிய மங்கைகள் அனைவருமே ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தது கூடுதல் ஆச்சரியம். அதுமட்டுமல்ல இதில் ஏழு வயது சிறுமி கூட பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதில் 10,176 பரதநாட்டிய கலைஞர்களும் சுமார் 500 பரதநாட்டிய ஆசிரியர்களும் இணைந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் கூட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.