இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
நடிகர் துல்கர் சல்மான் நடிக்க துவங்கிய புதிதில் அவர் நடித்த முதல் படமே ஆக்சன் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த 'உஸ்தாத் ஹோட்டல்' திரைப்படம் அவரை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக குடும்பப் பாங்கான கதை அம்சமாக அமைந்ததுடன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. அன்வர் ரஷீத் இயக்கிய இந்த படத்திற்கு 'பெங்களூர் டேஸ்' புகழ் இயக்குநர் அஞ்சலி மேனன் கதை எழுதியிருந்தார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் ஒரு இளைஞனுக்கு அவன் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. 2012ல் இந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 12 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 3ம் தேதி கேரளாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான அன்வர் ரஷீத். இது இப்போது இருக்கும் துல்கர் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பது ஒரு காரணம் என்றால், சமீபத்தில் வெளியான அவரது 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் நன்றாக ஓடி இருப்பதால் இப்போது இந்த 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை வெளியிட்டால் நல்ல வசூல் பார்க்கலாம் என்பதும் இன்னொரு காரணம் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.