தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

நடிகர் துல்கர் சல்மான் நடிக்க துவங்கிய புதிதில் அவர் நடித்த முதல் படமே ஆக்சன் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த 'உஸ்தாத் ஹோட்டல்' திரைப்படம் அவரை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக குடும்பப் பாங்கான கதை அம்சமாக அமைந்ததுடன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. அன்வர் ரஷீத் இயக்கிய இந்த படத்திற்கு 'பெங்களூர் டேஸ்' புகழ் இயக்குநர் அஞ்சலி மேனன் கதை எழுதியிருந்தார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் ஒரு இளைஞனுக்கு அவன் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்பதையும் மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. 2012ல் இந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 12 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 3ம் தேதி கேரளாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான அன்வர் ரஷீத். இது இப்போது இருக்கும் துல்கர் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பது ஒரு காரணம் என்றால், சமீபத்தில் வெளியான அவரது 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் நன்றாக ஓடி இருப்பதால் இப்போது இந்த 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை வெளியிட்டால் நல்ல வசூல் பார்க்கலாம் என்பதும் இன்னொரு காரணம் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.




