சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா-2 படம் வெளியானபோது ஆந்திராவில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்ததோடு, தெலுங்கானாவில் நான் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வந்துள்ளார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இப்படியான நிலையில், 2025ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணாவின் டக்கு மகாராஜ், வெங்கடேஷின் சங்கராந்திகி வஸ்துனம் போன்ற படங்களின் ஸ்பெஷல் ஷோக்களை திரையிடுவதற்கு ஆந்திரா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதோடு இந்த மூன்று படங்களின் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட உள்ளதாம்.