சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த முறை இதே திருச்சூரில் தோல்வியை தழுவிய அவர் தற்போது வெற்றி பெற்று கேரளாவில் வெற்றிபெற்ற முதல் பாஜக எம்பி என்கிற பெயரையும் பெற்றுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சிஏஏ மசோதா அமல்படுத்தப்பட்ட போது அதற்கு எதிர்ப்பாக நடைபெற்ற பேரணியில் மலையாள நடிகையும் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவருமான நிமிஷா சஜயன் பேசும்போது, சுரேஷ்கோபியை விமர்சிக்கும் விதமாக, கடந்த தேர்தலில் திருச்சூரில் தோல்வி அடைந்ததை குறித்து கிண்டல் அடிக்கும் விதமாக கருத்துக்களை கூறினார். அதற்காக அப்போதே அவர் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் நிமிஷா சஜயன் மீது சோசியல் மீடியாவில் விமர்சன தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து நிமிஷா சஜயன் தனது கமெண்ட் செக்சனை அணைத்து வைத்துவிட்டார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சுரேஷ் கோபியின் மகனும், நடிகருமான கோகுல் சுரேஷ் கூறும்போது, “நிமிஷா சஜயன் மீதான இந்த கருத்து தாக்குதல் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்போது மட்டுமல்ல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் பேசியபோதும் இதேபோன்று ஒரு எதிர்வினைக்கு அவர் ஆளானார். இதுபோன்று யாரையும் அநாகரிகமான கருத்துக்களால் தாக்குவது தவறு.
அதேசமயம் தனது துறையில் பணியாற்றும் ஒரு சக சீனியர் தொழிலாளியாக, மக்கள் மதிக்கும் ஒரு நடிகராக இருக்கும் நபரை பற்றி நாம் இப்படி கூறுகிறோமே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று அவர் அப்போது முன்பின் யோசிக்காமல் பேசியதை தவிர்த்து இருக்கலாம். மீடியாக்களில் என் தந்தை சுரேஷ்கோபி பற்றி பெரும்பாலும் எதிர்மறையாகவே காட்ட முயற்சி நடக்கிறது. என் தந்தையை பற்றி எந்த விஷயங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இதுபோன்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து நிமிஷா சஜயன் போன்றவர்கள் அவரைப் பற்றி தவறாக புரிந்து வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.