ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி மூலமாக தான் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியை பெற்றுள்ளார். முதன்முறையாக அவர் ருசிக்கும் மாபெரும் வெற்றி இது என்பதால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் டில்லி சென்ற பவன் கல்யாண் தன்னுடன் தனது இரண்டாவது மனைவி ரேணு தேசாயின் மகன் அகிரா நந்தனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பவன் கல்யாண்.
தானும் தந்தையும் பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது தாய்க்கு அனுப்பி வைத்த அகிரா நந்தன், பிரதமரை சந்தித்த அந்த கணம் குறித்து சிலாகித்து விவரித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருக்கும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் தனது மகன் பிரதமரின் அருகில் நிற்பதைக் கண்டு பூரிப்பில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதே சமயம் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.