எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சினிமாவில் ஏழை மக்களுக் ஓடி, ஓடி உதவி செய்கிறவர் என்.டி.பாலகிருஷ்ணா. ஏழை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பறந்து பறந்து அடித்து வில்லன்களை துவம்சம் செய்கிறவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் தன்னை எம்.எல்.ஏ ஆக்கிய மக்களை அவர் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம். தொகுதி பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லையாம். இப்படி அவர் தொகுதி மக்களே போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை. தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எதிர்கட்சிகளின் சதி என்று பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.