'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2002ல் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு ஹிந்தி சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இதன் காரணமாக இந்திய படங்களில் அவர் நடிப்பது குறைந்துவிட்டது.
பிரியங்கா சோப்ரா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சமீபகாலமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அதிகமாக நடித்து வருகிறேன். அதனால் இந்தியாவையும் இந்திய படங்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன். இந்த நேரத்தில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னதான் ஹாலிவுட் படங்களில் பிசியாக நடித்தாலும் இனி இந்திய படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.