விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் என்.டி.பாலகிருஷ்ணா, வெறும் கையால் ரயிலை நிறுத்துவது, இரண்டு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாடுவது என இவரது பட ஆக்ஷன் காட்சிகள் பிரபலம். இதனை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் பொது வெளியில் பெரிதாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நடித்து வரும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதிலும் இவர் பத்து பேரை தலையில் தூக்கி வீசுவது மாதிரியான காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி உள்ளார். ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, எம்.தேஜஸ்வினி நந்தமுரி தயாரித்துள்ளனர். இந்த படம் பான் இந்திய படமாக செப்டம்பர் 25ம் தேதியன்று வெளியாகிறது.
டீசரில் வெளியாகி உள்ள காட்சிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறியிருப்பதாவது, ''ரசிகர்கள் அதிரடி படங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். அவர்களை எளிதில் திருப்திபடுத்தவே முடியாது. எனது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கிறது. எனவே தான் அவர்கள் விரும்பும்படியான காட்சிகள் இருக்கும் வகையில் பார்த்து கொள்கிறேன். லாஜிக் பற்றி எனக்கு கவலை இல்லை. ரசிகர்களின் மகிழ்ச்சி, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் கடமை. அதற்காக எந்த ரிஸ்க்கும் நான் எடுப்பேன்'' என்கிறார் பாலகிருஷ்ணா.