விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
'தில்லுமுல்லு' படம் ரஜினியின் காமெடியால் வெற்றி பெற்றதை தொடர்ந்து பஞ்சு அருணாசலம் அதே பாணியில் ரஜினியை காமெடி ஹீரோவாக்கி தயாரித்த படம் 'தம்பிக்கு எந்த ஊரு'. படத்தின் கதை, வசனத்தையும் பஞ்சு அருணாசலமே எழுதினார். ராஜசேகர் இயக்கினார். மாதவி நாயகியாக நடித்திருந்தார்.
ஊதாரித்தனமாக சுற்றுத் திரியும் தன் மகனை பணக்கார தந்தை தனது நண்பன் வீட்டில் தன் அடையாளத்தை மறைத்து ஒரு வருடம் வேலை செய்து காட்டு என்று சவால் விடுவார். அந்த சவாலை ரஜினி எப்படி செய்து முடிக்கிறார் என்பது கதை. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களில் 4 பாடல்கள் ரிக்கார்டிங் முடிந்து படப்பிடிப்பும் முடிந்தது. ஒரு பாடல் பாக்கி உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. அவருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்தது. அவரால் அப்போது பேச முடியாத நிலை.
தன்னால் படம் தாமதமாக கூடாது என்று கருதிய இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனைக்கு அழைத்து வாயால் விசில் அடித்து பாடலை பாடி காட்டினார். அதைக் கொண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அந்த பாடலை பாடினார். பெண் குரலில் ஜானகி பாடினார். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்...' என்ற பாடல்தான் அது. இப்போது கேட்டாலும் மனதை உருக்கும் காதல் பாடல் அது.