சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கடந்த வருடம் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் துணிச்சலாக வெளிவந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ஆனால் ஆச்சரியமாக பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது கர்நாடகாவை சேர்ந்த ஆண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அதிர்ச்சி அளித்தார்.
12 வருடங்களுக்கு முன்பு தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை பெங்களூருவில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு வர சொன்ன இயக்குனர் ரஞ்சித் அங்கே தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியும் வைத்தார் என்று தனது குற்றச்சாட்டில் கூறியிருந்தார். முதலில் கேரளாவில் இது குறித்து இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் பின்னர் அது கர்நாடகா காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது புகார் அளித்திருந்த அந்த நபர் கூறுவது அனைத்துமே பொய் என்றும், மேலும் சம்பவம் நடந்த உடனே இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளிக்காமல் 12 வருடங்கள் தாமதப்படுத்தியது எதற்காக என்கிற கேள்வியையும் இயக்குனர் ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கபட்டது.
மேலும் தன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த வித முகாந்திரமோ, ஆதாரங்களோ இல்லை எனக் கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.