‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'தலைவன் தலைவி' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜூலை 25ல் படம் ரிலீசாகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடன் 'வாத்தி' படத்தில் நடித்த சம்யுக்தா, நடிகை சார்மி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், விஜய் சேதுபதி, சம்யுக்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.