லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமான்டி காலனி. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கினார் அஜய் ஞானமுத்து. பின்னர் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அருள் நிதியே இந்த படத்திலும் நடிக்கிறார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.