மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் முத்தையா. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வியடைந்தது. அடுத்த படத்திற்காக தொடர்ந்து சில முன்னனி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இப்போது தனது மகனை வைத்து முத்தையா 'சுள்ளான் சேது' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்கை ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க பேசி வந்தார் முத்தையா. ஆனால் இந்தபடம் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனால் நடிகர் அருள்நிதியை வைத்து அதிரடியான கிராமத்து கதைகளம் கொண்ட புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.