பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு |

மார்க் ஆண்டனி படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படத்தை இயக்கினார். சமீபத்தில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் அஜித் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கு பக்கம் போய் உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் தொடர்ச்சியாக மினிமம் கியாரண்டி உடன் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தால் ஈர்க்கப்பட்ட பாலகிருஷ்ணா திடீரென ஆதிக்கை அழைத்து பேசி உள்ளார். தனக்கு ஏதேனும் கதை உள்ளதா என அவரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற அதிரடி ஆக் ஷன் கதை உடன் விரைவில் ஆதிக் அவரை சந்திக்கலாம் என்றும், விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.