இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
மார்க் ஆண்டனி படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படத்தை இயக்கினார். சமீபத்தில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் அஜித் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கு பக்கம் போய் உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் தொடர்ச்சியாக மினிமம் கியாரண்டி உடன் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தால் ஈர்க்கப்பட்ட பாலகிருஷ்ணா திடீரென ஆதிக்கை அழைத்து பேசி உள்ளார். தனக்கு ஏதேனும் கதை உள்ளதா என அவரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற அதிரடி ஆக் ஷன் கதை உடன் விரைவில் ஆதிக் அவரை சந்திக்கலாம் என்றும், விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.