ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |

சென்னையில் இன்று நடந்த பிளாக் மெயில் பட விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். காரணம், படத்தில் ஹீரோவாக நடித்தவர் அவர் நண்பர் ஜி.வி.பிரகாஷ். கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கி இருக்கிறார்.
படவிழாவில் ஆதிக் பேசுகையில் ''என்னை திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இந்த பட இயக்குனர் மாறன் இரவு காட்சிகளை அதிகம் ரசித்து எடுப்பவர். ஆனால், ஹீரோ ஜி.வி.பிரகாசுக்கு இரவு பிடிக்காது. அவர் லைட் போட்டுக் கொண்டுதான் துாங்குவார். அவர் இந்த படத்துக்குபின் மாறியிருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் ''அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவது உறுதி. அது குட் பேட் அக்லி மாதிரி இருக்காது, வேறு ஜானரில் இருக்கும். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு , அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்' என்றார்.
ஹீரோயின், தயாரிப்பாளர் குறித்து ஆதிக் சொல்லவில்லை. ஆனாலும், ரோமியோ பிக்சர் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.




