அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தாண்டு இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‛சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்ததோடு 4 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்தார்.
இப்படம் தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா பேசும்போது, ‛‛குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு பிடிக்கும். அதை பெருமையாக கருதுகிறேன். எனது சினிமா கேரியரில் இளம் வயதில் அதிகளவிலான அம்மா ரோலில் நடித்துள்ளேன். ஒரு நடிகையாக இருப்பவர் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் 4 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என இயக்குனர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்'' என்றார்.