22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தாண்டு இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‛சங்கராந்திகி வஸ்துன்னம்' படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக அவர் நடித்ததோடு 4 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்தார்.
இப்படம் தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா பேசும்போது, ‛‛குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு பிடிக்கும். அதை பெருமையாக கருதுகிறேன். எனது சினிமா கேரியரில் இளம் வயதில் அதிகளவிலான அம்மா ரோலில் நடித்துள்ளேன். ஒரு நடிகையாக இருப்பவர் எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் 4 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என இயக்குனர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்'' என்றார்.