‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் திட்டம் இரண்டு. இப்படம் ஓடிடியில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதன்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். மர்டர் மிஸ்டரி திரில்லர் வகை படம். உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. உயிர்த்தோழி ஒருவர் காணாமல் போகிறார். அதை விசாரிக்கையில் அவர் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. அந்த கொலை தொடர்பான விசாரணை தான் படம்.
போலீசாக இருந்தாலும் வழக்கமாக படங்களில் காட்டப்படும் பெண் போலீசாக அல்லாமல் காதல், எமோஷனல் எல்லாவற்றையும் காட்டவேண்டிய ஒரு கதாபாத்திரம். கொரோனா காலகட்டத்தில் யாருமே எதிர்பாராத அளவுக்கு சினிமா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கும் தியேட்டர்களில் ரிலீசாக தான் ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு சாதகமாக இல்லையே... படம் நன்றாக இருந்தால் போதும். தியேட்டர் ரிலீஸ் இல்லாவிட்டாலும் எல்லோரையும் சென்று சேர்கிறது.
ஒரு படத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டே இருப்பது என்பது தயாரிப்பாளருக்கு பலத்த இழப்பை தரும். சூரரை போற்று, க/பெ.ரணசிங்கம், இப்போது சார்பட்டா பரம்பரை என ஓடிடியிலும் படங்கள் ஹிட் அடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்