நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு திரையுலகில் கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். தெலுங்கானா பகுதியை சேர்ந்த கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் பேசும் பாஷையில் இவர் வசனம் பேசுவதால் இவருக்கு திரையுலகில் பிஷ் வெங்கட் என்கிற பெயரே நிலைத்து விட்டது.
இந்த நிலையில் சமீப காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது.
பிஷ் வெங்கட்டின் மகள் தந்தையின் உடல்நிலை குறித்து கூறும்போது, “இங்கு சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் எனது தந்தை இணைந்து பல வருடங்களாக நடித்து வருகிறார். உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட பிரபாஸ் அவரது உதவியாளரை அனுப்பி வைத்து அது குறித்து விசாரித்தார். சிகிச்சைக்கு 50 லட்சம் வரை செலவாகும் என கேள்விப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனியுங்கள் அந்த சமயத்தில் அதற்கான செலவுகள் முழுவதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று பிரபாஸின் உதவியாளர் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதேபோல சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என் தந்தைக்கு சிறுநீரக தானம் அளிக்கும் ஒரு நபரை கண்டுபிடித்துக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அவர்களுடன் பல படங்களில் என் தந்தை இணைந்து நடித்துள்ளார். என் தந்தையை காப்பாற்ற ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.