'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் புதுமுகங்களான சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன், ஜெனிலியா ஆகியோர் நடிக்க 2003ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் 'பாய்ஸ்'.
படத்தின் நாயகியான ஜெனிலியாவைக் காதலிக்க ஐந்து நண்பர்களான சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் போட்டி போடுவதுதான் படத்தின் கதை. அந்தப் போட்டியில் சித்தார்த் வெற்றி பெற, அவருக்கும் ஜெனிலியாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பின் அவர்களுக்குள் மோதல், பிரிவு, நண்பர்களின் இசைக்குழு, ஏமாற்றம் என ஒரு சுற்று சுற்றி படம் முடியும்.
ஆபாசம், அருவெறுப்பு என சுஜாதாவின் இரட்டை அர்த்த வசனங்கள் இடைவேளை வரை வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. படத்திற்குக் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தன. இப்படி ஒரு படத்தை ஷங்கர் எப்படி இயக்கினார் என்று கேள்விகள் எழுந்தன. ஏஆர் ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டானாலும், ஒரு ஐயப்பன் பாடலுக்கு அவர் இசையமைக்க மறுத்ததும் அப்போது சர்ச்சையானது.
அப்படத்தில் நடித்தவர்களில் தமன் தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். சித்தார்த், பரத் இருவரும் பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நகுல் டிவி ஷோக்களில் நடுவராகப் போய்விட்டார். மணிகண்டன் ஆளையே காணவில்லை. ஜெனிலியா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ஒரு வெற்றிகரமான ரவுண்டு வந்து பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைக் காதலித்து மணமுடித்து, இரண்டு மகன்களுக்கு அம்மாவாகி, சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
வெளிவந்த போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பாய்ஸ்' படத்தை டிவியில் முதல் முறை ஒளிபரப்பிய போது ஆபாசக் காட்சிகள், வசனங்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு ஒளிபரப்பினார்கள். தியேட்டர்களில் பார்த்தவர்கள், டிவியில் படத்தைப் பார்த்த போது, இப்படி சொல்லியிருக்க வேண்டிய படத்தை எப்படியெல்லாம் சொல்லியிருந்தார் ஷங்கர் என ஆச்சரியப்பட்டார்கள்.
ஷங்கர் இயக்கிய படங்களில் தரமற்ற ஒரு படமாக அமைந்து அவரது இமேஜை மிகவும் இறக்கிவிட்ட படமாக 'பாய்ஸ்' படம் அமைந்தது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் அது ஷங்கருக்கு 'பாய்ஸ்' மூலமாக நடந்தது.