பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ரோபோ சங்கர் குறிப்பிடத்தக்கவர். முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த செம்டம்பர் 18 ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் நினைவாக நடிகர் டிங்கு, ரோபோடிக் யானையை குபேரர் கோவிலுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவலை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.