மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

திரைப்பட பின்னணி மற்றும் மேடைப் பாடகியான மாலதி லக்ஷ்மன், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் பார்த்திபன் கனவு படத்தில் "வாடி மச்சினியே", திருடா திருடி படத்தில் "மன்மத ராசா", திருப்பாச்சியில் "கும்பிட போன தெய்வம்", அன்பே சிவம் போன்ற படங்களில் பாடியுள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். குறிப்பாக தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், "ஆர்யா" (2004) படத்தில் இடம்பெற்ற "ஆ அந்தே அமலாபுரம்" பாடலும் அவரது ஹிட் லிஸ்டில் ஒன்று. இவருடைய கணவர் லக்ஷ்மன் நடத்தி வரும் 'லக்ஷ்மன் ஸ்ருதி' இசைக்குழுவில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. இதற்காக மாலதி லக்ஷ்மன், முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
இது தொடர்பாக பேசிய மாலதி லக்ஷ்மன், "அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம், எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத்துறைக்கு வலுவூட்ட என்னால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் வழங்குவேன். அதோடு அனைவரின் ஒத்துழைப்போடு இசை மற்றும் இதர கலைகளை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பேன்" என்றார்.




