''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நடிகர் விஷால் அடுத்தடுத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது எனிமி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷால், தன்னுடைய 31-வது படத்தை, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விஷால் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் உள்ள, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அப்போது ஆக்ஷன் காட்சிகளை தத்ரூபமாக படமாக்க பல்வேறு ரிஸ்க் எடுத்து விஷால் நடித்திருந்தார். இதுகுறித்த காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோவை விஷால் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பின்னர் எனிமி படத்தின் பணிக்காக சிறு இடைவெளி விட்ட விஷால் மீண்டும் இந்த படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஆக.,29) தனது 44வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டுள்ளார். வீரமே வாகை சூடும் எனும் தலைப்பில் மிரட்டல் தோற்றத்துடன் பர்ஸ்ட் லுக் படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.