கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛கேம் சேஞ்ஜர்'. இந்த படம் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரண்டாம் நாளில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகபடியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இந்த கேம் சேஞ்ஜர் படம் ஹிந்தியில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு கணித்ததை விட அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து தில்ராஜு வெளியிட்டுள்ள செய்தியில், ‛பாலிவுட்டில் இந்த படம் முதல் நாளில் ஐந்து கோடியை விட குறைவாகத்தான் வசூலிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இப்படம் பாலிவுட்டில் முதல் நாளில் 8.64 கோடி வசூலித்து இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அங்குள்ள ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் மூன்று நாட்களில் இந்த படம் ஹிந்தியில் 30 கோடி ரூபாய் வசூலிக்கும்' என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.