கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகிறது. 2025ம் ஆண்டில் வெளியாகும் படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு 2026, மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
2026 ஆஸ்கர் விருதுகளுக்காக சில புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஆஸ்கர் விருது போட்டிக்காக வந்த சில படங்களை 'அகாடமி வாக்காளர்கள்' பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதற்காக, 'அகாடமி வாக்காளர்கள்' வாக்களிப்பதற்கு முன்பாக அவர்கள் பார்த்த அனைத்து படங்களையும் 'பார்த்துவிட்டோம்' என்பதை உறுதி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது, 'ஏஐ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களை வரவேற்கும் விதமாகவும் சில வழிகாட்டுதல்களை அகாடமி வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்க படைப்பாளியாக இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அகாடமி கூறியுள்ளது.
கடந்த வருட ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்களான 'தி ப்ரூட்டலிஸ்', மற்றும் 'எமிலியா பெரெஸ்' படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.