கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி |

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று கோல்கட்ட - குஜராத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி முதல் பேட்டிங்கில் 198 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஓபனர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கி அரைசதம் அடித்தார்கள். இந்நிலையில் இந்த இருவரில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அவரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், 'நீங்கள் இன்னும் முன்னேறி செல்லுங்கள். உங்களை இந்திய அணியின் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.