படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தற்போது முதன்முறையாக சொந்தமாக ஒரு படத்தை தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ‛சுபம்' என பெயரிட்டுள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் மே 9ல் படம் ரிலீஸாகிறது. இதையொட்டி படத்தினை புரொமோஷன் செய்து வருகிறார்.
சமந்தா கூறுகையில், ‛‛எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் எனக்கு வெட்கமாக உள்ளது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என யோசிக்கிறேன். ஆனால் சுபம் படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்'' என்றார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த ‛விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‛யே மாய சேசாவே' படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தபோது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை சென்று பின்னர் பிரிந்தனர். தனது முதல் படத்தை பற்றி சமந்தா இப்படி பேசியிருப்பது நாகசைதன்யா மீதான வெறுப்பால் என்பது தெளிவாக தெரிகிறது.