மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
ஒவ்வொரு ஆண்டு பாலிவுட்டில் உள்ள திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மகா ஆரோக்யா கேம்ப் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் நடிகை பூனம் தில்லான், நடிகர்கள் தீபக் பிரசார், விந்து தாரா சிங், தீரஜ் குமார், இசையமைப்பாளர் திலீப் சென், பாடகி மதுஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடிகர் தீரஜ் குமார் கூறுகையில் ‛‛டாக்டர் தர்மேந்திர குமார் தனியாக இதை துவங்கினார். பின்னர் அவருக்கு நாங்கள் எல்லாம் துணை நின்றோம். இது திரையுலகினருக்கான ஒரு வரலாற்று முன்னெடுப்பு. ஜன., 19ல் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுங்கள்'' என்றார்.
டாக்டர் தர்மேந்திர குமார் கூறுகையில், ‛‛இந்த ஆண்டு முகாமுக்கு ரூ.4 கோடிக்கு மேல் மருந்துகளை கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நோய்க்கும் பல மருத்துவர்கள் இங்கு வருவார்கள். இம்முறை பெண்களுக்கும் பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.