எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛கேம் சேஞ்ஜர்'. இந்த படம் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரண்டாம் நாளில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகபடியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இந்த கேம் சேஞ்ஜர் படம் ஹிந்தியில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு கணித்ததை விட அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து தில்ராஜு வெளியிட்டுள்ள செய்தியில், ‛பாலிவுட்டில் இந்த படம் முதல் நாளில் ஐந்து கோடியை விட குறைவாகத்தான் வசூலிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இப்படம் பாலிவுட்டில் முதல் நாளில் 8.64 கோடி வசூலித்து இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அங்குள்ள ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் மூன்று நாட்களில் இந்த படம் ஹிந்தியில் 30 கோடி ரூபாய் வசூலிக்கும்' என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.