சமுத்திரக்கனிக்கு இயக்குனர் பிரியதர்ஷன் சொன்ன அறிவுரை | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகப் படத்தின் பெயர் 'சிக்மா' | நகை கடத்தல் நடிகையின் கூட்டாளி நடிகருக்கு சிறையில் சொகுசு வசதி ; வெளியான அதிர்ச்சி வீடியோ | எதிர்பார்த்த 'வியூஸ்கள்' பெறாத 'தளபதி கச்சேரி' | ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர் | 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார் : இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட ஆள் இல்லை | சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? |

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛கேம் சேஞ்ஜர்'. இந்த படம் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரண்டாம் நாளில் 80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகபடியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் இந்த கேம் சேஞ்ஜர் படம் ஹிந்தியில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு கணித்ததை விட அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து தில்ராஜு வெளியிட்டுள்ள செய்தியில், ‛பாலிவுட்டில் இந்த படம் முதல் நாளில் ஐந்து கோடியை விட குறைவாகத்தான் வசூலிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இப்படம் பாலிவுட்டில் முதல் நாளில் 8.64 கோடி வசூலித்து இருக்கிறது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அங்குள்ள ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் மூன்று நாட்களில் இந்த படம் ஹிந்தியில் 30 கோடி ரூபாய் வசூலிக்கும்' என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.