பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை 2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளார்கள். மேலும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள ரோஜா, அம்மாநிலத்தின் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தனது கணவர் செல்வமணி குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ''நான் வீட்டில் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் எனது கணவர் செல்வமணி சண்டை போட மாட்டார். அதையும் மீறி அவருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்தை என்னிடத்தில் காட்டாமல், தனது அறை கதவை மூடிக் கொள்வார். இதற்கு காரணம் அவர் பதிலுக்கு என்னைத் திட்டினால் நான் அழுவேன். அதன் பிறகு என்னை சமாதானப்படுத்த அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருக்கும்'' என்று பேசிய ரோஜா, ''ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் தோற்று போங்கள். மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் வெளியில் போய் வெற்றி பெற முடியாது'' என்றும் பேசி உள்ளார்.