ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை 2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளார்கள். மேலும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள ரோஜா, அம்மாநிலத்தின் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தனது கணவர் செல்வமணி குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ''நான் வீட்டில் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் எனது கணவர் செல்வமணி சண்டை போட மாட்டார். அதையும் மீறி அவருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்தை என்னிடத்தில் காட்டாமல், தனது அறை கதவை மூடிக் கொள்வார். இதற்கு காரணம் அவர் பதிலுக்கு என்னைத் திட்டினால் நான் அழுவேன். அதன் பிறகு என்னை சமாதானப்படுத்த அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருக்கும்'' என்று பேசிய ரோஜா, ''ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் தோற்று போங்கள். மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் வெளியில் போய் வெற்றி பெற முடியாது'' என்றும் பேசி உள்ளார்.