ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் வெளியானது. இயக்குனர் விபின்தாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் கதாநாயகனாக இயக்குனர் பஷில் ஜோசப் மற்றும் கதாநாயகியாக தர்ஷனா ராஜேந்திரன் நடித்து இருந்தனர். படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என விரும்பும் இளம்பெண் ஒருவர் பெற்றோரின் கட்டாயத்தால் அதிகம் படிக்காத கிராமத்து இளைஞன் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். தன் வீட்டிற்கு வந்ததிலிருந்து இளம்பெண் மீது பழமைவாத அடக்கு முறையை அந்த இளைஞர் மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் வெகுண்டெழும் அந்த இளம்பெண் தற்காப்பு கலையாக கராத்தே கற்றுக்கொண்டு தனது கணவனை சமாளித்து எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பது தான் கதை.
இந்த படம் பெண்களுக்கான ஒரு உற்சாக தூண்டுதல் அளிக்கும் விதமாக அதே சமயம் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியான சில நாட்களுக்கு பின் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தை பார்த்துவிட்டு இதன் இயக்குனரை ரொம்பவே சிலாகித்து பாராட்டினார். அதன்பிறகு விபீன்தாஸ் அமீர்கானை நேரிலேயே சந்தித்தார். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அமீர்கானே தயாரிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அசீஸ் நெடுமங்காடி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “அமீர்கான் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்க ரொம்பவே ஆர்வமாக இருந்தார். இந்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. ஆனால் மலையாள படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி பாலிவுட்டில் பொருத்தமான நட்சத்திரங்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மலையாளத்தில் நடித்தவர்களை கூட இங்கே நடிக்க வைக்கலாமா என்கிற யோசனையும் கூட செய்தார்கள், ஆனால் முழுமையான நட்சத்திர தேர்வு இந்த படத்திற்கு அமையாமல் போனதால் ஒரு கட்டத்தில் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.