தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஆமீர்கான் ஆகியோருக்கு அடுத்தடுத்து தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' நடிகரான ராம் சரண். சல்மான்கான் தற்போது தன்னுடைய 'கபி ஈத், கபி தீவாளி' ஹிந்திப் படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார்.
அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் ராம் சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களை ராம்சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். இது மூன்று தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் அது போல ராம்சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து சல்மான், ஆமீர் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்தளித்தது குறித்து ராம்சரண் மனைவி புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் ராம்சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி. அதில் நடிகர் சல்மானும் கலந்து கொண்டார்.