காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் நேற்று முன்தினம் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக அறிவித்திருந்தார். ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஆலியா இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே ஆலியா கர்ப்பம் அடைந்திருப்பார் என பாலிவுட் மீடியாக்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாலிவுட்டில் இது ஒன்றும் புதிதல்ல என்றும் இதற்கு முன்பும் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்றும் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளார்கள். நேஹா தூப்பியா, கொன்கனா சென் சர்மா, ஸ்ரீதேவி, சரிகா, செலினா ஜெட்லி, அம்ரிதா அரோரா ஆகியோர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சிலர்.
பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்தால் நான்கைந்து மாதங்கள் கழித்தே அது பற்றி வெளியில் சொல்வார்கள். ஆனால், ஆலியா பட் இரண்டு மாதங்களில் அது பற்றி சொல்லியிருப்பதுதான் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.