சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பாலிவுட் முன்னணி நடிகர் ஆமீர்கான் நடிப்பில் வரும் ஆக.,11ம் தேதி வெளியாக இருக்கும் படம் லால்சிங் சத்தா. இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஹிந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து பான் இந்தியா படமாக வெளியாகிறது. தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிடுகிறார். சமீபத்தில் இந்த படத்தை நாகார்ஜுனா உள்ளிட்ட சில தெலுங்கு பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டினார் சிரஞ்சீவி. இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மீடியாக்கள் மும்பாக சிரஞ்சீவி, ஆமீர்கான் இருவருக்குமான கேள்வி பதில் பகுதியும் இடம் பெற்றது. இதில் ஆமீர்கானிடம் எப்போது தெலுங்கு படங்களில் நடிக்க போகிறீர்கள் என சிரஞ்சீவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆமிர்கான் தெலுங்கு படங்களில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாகவும், அதேசமயம் சிரஞ்சீவி தற்போது மலையாள லூசிபர் ரீமேக் நடித்துவரும் காட்பாதர் படத்தில் தன்னை அழைப்பதற்கு பதிலாக சல்மான்கானை அழைத்து நடிக்க வைப்பது ஏன் என்றும் பதிலுக்கு சிரஞ்சீவியிடம் ஒரு கேள்வியை வைத்தார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, அந்த படத்திற்கு சல்மான்கான் போன்ற கட்டுமஸ்தான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நடிகர் தான் தேவைப்பட்டாரே தவிர, ஆமீர்கான் போன்ற நடிப்புக்கும் மூளைக்கு வேலையும் கொடுக்கும் நடிகர் தேவைப்படவில்லை. அதனால் தான் உங்களை அழைக்கவில்லை என்று ஆமீர்கானுக்கு ஜாலியான விளக்கம் அளித்தார்.