பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பாலிவு நடிகர் ரன்வீர் சிங் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்தார். இந்த படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனே கணவரின் நிர்வாணத்தை புகழ்ந்தார், ஆனால் மற்றவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். வட நாட்டில் பல இடங்களில் ரன்வீர் சிங் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போராட்டமும் நடந்த வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங்கின் புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, ரன்வீர் சிங்குக்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இந்தூரை சேர்ந்த இன்னொரு தொண்டு நிறுவனமான'நேகி கீ திவார்' ரன்வீர் சிங்குக்குக் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளைச் சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத ஆடைகளை போடுவதற்கு டொனேஷன் பாக்சையும் திறந்திருக்கிறது.