ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பாலிவுட் முன்னணி நடிகர் ஆமீர்கான் நடிப்பில் வரும் ஆக.,11ம் தேதி வெளியாக இருக்கும் படம் லால்சிங் சத்தா. இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஹிந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து பான் இந்தியா படமாக வெளியாகிறது. தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிடுகிறார். சமீபத்தில் இந்த படத்தை நாகார்ஜுனா உள்ளிட்ட சில தெலுங்கு பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டினார் சிரஞ்சீவி. இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மீடியாக்கள் மும்பாக சிரஞ்சீவி, ஆமீர்கான் இருவருக்குமான கேள்வி பதில் பகுதியும் இடம் பெற்றது. இதில் ஆமீர்கானிடம் எப்போது தெலுங்கு படங்களில் நடிக்க போகிறீர்கள் என சிரஞ்சீவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆமிர்கான் தெலுங்கு படங்களில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாகவும், அதேசமயம் சிரஞ்சீவி தற்போது மலையாள லூசிபர் ரீமேக் நடித்துவரும் காட்பாதர் படத்தில் தன்னை அழைப்பதற்கு பதிலாக சல்மான்கானை அழைத்து நடிக்க வைப்பது ஏன் என்றும் பதிலுக்கு சிரஞ்சீவியிடம் ஒரு கேள்வியை வைத்தார்.
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, அந்த படத்திற்கு சல்மான்கான் போன்ற கட்டுமஸ்தான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நடிகர் தான் தேவைப்பட்டாரே தவிர, ஆமீர்கான் போன்ற நடிப்புக்கும் மூளைக்கு வேலையும் கொடுக்கும் நடிகர் தேவைப்படவில்லை. அதனால் தான் உங்களை அழைக்கவில்லை என்று ஆமீர்கானுக்கு ஜாலியான விளக்கம் அளித்தார்.