'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட திறமையாளராக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ். கடந்த 10 வருடங்களில் மலையாள திரையுலகம் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை படங்களில் மாறி மாறி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது டைரக்ஷனில் மோகன்லால் நடிப்பில் 'எம்புரான்' திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க இருக்கிறார் பிரித்விராஜ். அதில் பிரித்விராஜ் - பார்வதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் உருவாகும் 'தாய்ரா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரித்விராஜ். கதாநாயகியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். 'ராசி, தல்வார், சாம் பகதூர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பெண் இயக்குனர் மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து கரீனா கபூர் கூறும்போது, “பொதுவாக நான் இயக்குனர்களின் நடிகை தான்.. ஆனால் இந்த படத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதற்காகவே ஆர்வமாக ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
அதேபோல நடிகர் பிரித்விராஜ் இந்த படம் பற்றி கூறும்போது, “சில கதைகள் நீங்கள் கேட்ட நாளிலிருந்து உங்கள் மனதிற்குள்ளேயே தங்கி இருக்கும். தாய்ரா அப்படிப்பட்ட ஒரு கதை தான்.. மேக்னா குல்சார், கரீனா கபூர் மற்றும் ஜங்கிள் பிக்சர்ஸுடனும் இணைந்து பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.