பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
கடந்த வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பேண்டஸி படங்களான கல்கி மற்றும் கங்குவா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. இவரது தங்கை குஷ்பூ பதானி பரேலியில் தனது தந்தையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜெகதீஷ் பதானியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் வழக்கம் போல காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக கிளம்பி சென்றுள்ளார் குஷ்பூ பதானி. அப்போது அருகில் இருந்த ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்டுள்ளது. அந்த கட்டிடத்திற்கு நேரடியாக உள்ளே செல்லும் வழி சரியாக இல்லாததால் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்துள்ளார் குஷ்பூ பதானி.
அங்கே 10 மாத குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்து வந்து முதலுதவி செய்து பசியாற்றி பின் காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த குழந்தையை எடுத்துச் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இப்படி குழந்தையை காப்பாற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இந்த குழந்தையை யார் இப்படி கொண்டு வந்து விட்டு சென்றது என தேடி போலீஸார் வருகின்றனர்.