மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

2024ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஆறு வாரங்களே உள்ளது. இந்த ஆண்டின் கடைசி பெரிய படமாக நாளை 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து டிசம்பர் 20ம் தேதி 'விடுதலை 2' படம் வெளியாக இருக்கிறது. இவற்றோடு டிசம்பர் 5ல் 'புஷ்பா 2' டப்பிங் படமும் வரும். இடைப்பட்ட வாரங்களில் மற்ற தமிழ்ப் படங்களை வெளியிடுவதற்கான சரியான தேதியைத் தேர்வு செய்வது தயாரிப்பாளர்களுக்கு தலைவலியான ஒன்று.
நாளை நவம்பர் 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் 'பீனிக்ஸ்' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதே போல அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார்கள்.
'பீனிக்ஸ்' பட வெளியீடு தள்ளி வைப்புக்கு, 'எதிர்பாராதா சூழ்நிலைகள் காரணமாக,' என்றும், 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்திற்கு 'ஒரு வார கனமழை அறிவிப்பு' காரணம் என்றும் அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே, 'அமரன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், 'கங்குவா' படத்திற்குக் கூட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது. இந்நிலையில் 'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றும் தகவல். அதனால்தான், படங்களைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
இனி, எஞ்சியுள்ள ஆறு வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஆறேழு படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.