ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
2024ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஆறு வாரங்களே உள்ளது. இந்த ஆண்டின் கடைசி பெரிய படமாக நாளை 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து டிசம்பர் 20ம் தேதி 'விடுதலை 2' படம் வெளியாக இருக்கிறது. இவற்றோடு டிசம்பர் 5ல் 'புஷ்பா 2' டப்பிங் படமும் வரும். இடைப்பட்ட வாரங்களில் மற்ற தமிழ்ப் படங்களை வெளியிடுவதற்கான சரியான தேதியைத் தேர்வு செய்வது தயாரிப்பாளர்களுக்கு தலைவலியான ஒன்று.
நாளை நவம்பர் 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் 'பீனிக்ஸ்' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதே போல அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார்கள்.
'பீனிக்ஸ்' பட வெளியீடு தள்ளி வைப்புக்கு, 'எதிர்பாராதா சூழ்நிலைகள் காரணமாக,' என்றும், 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்திற்கு 'ஒரு வார கனமழை அறிவிப்பு' காரணம் என்றும் அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே, 'அமரன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், 'கங்குவா' படத்திற்குக் கூட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது. இந்நிலையில் 'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றும் தகவல். அதனால்தான், படங்களைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
இனி, எஞ்சியுள்ள ஆறு வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஆறேழு படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.